Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குஷ்பு டுவிட்டர் கணக்கை முடக்கியது யார்? சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம்

குஷ்பு டுவிட்டர் கணக்கை முடக்கியது யார்? சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம்
, வெள்ளி, 23 ஜூலை 2021 (14:42 IST)
நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை முடக்கியது யார் என கேட்டு ட்விட்டர் நிர்வாகத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியதாக தகவல் வெளிவந்துள்ளது
 
நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடக்கப்பட்டது. இதனை அடுத்து தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாகவும், தனது ட்விட்டர் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாகவும் கடந்த 20ஆம் தேதி டிஜிபி டிஜிபியிடம் நடிகை குஷ்பு புகார் அளித்தார்
 
இந்த புகாரின் அடிப்படையில் தற்போது நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை முடக்கியது யாரென்று டுவிட்டர் நிர்வாகத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளிவந்தது
 
இந்த கடிதத்திற்கு டுவிட்டர் நிர்வாகம் அளிக்கும் பதிலை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை சென்னையில் போலீசார் எடுப்பார் சைபர் கிரைம் போலீசார் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் சினிமா பயணம் முதல் அரசியல் கருத்துக்கள் வரை - சில சுவாரஸ்ய தகவல்கள்