Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுக்குழு கூட்டம்; குவிந்த வழக்குகள்! – மொத்தமாக 3 மணிக்கு விசாரணை!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (13:00 IST)
நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதை எதிர்த்து தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரிக்கப்பட உள்ளன.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பொதுக்குழுவுக்கு தடை மற்றும் கட்சி சட்டத்தில் திருத்தம் தேவை ஆகியவற்றை வலியுறுத்தி இருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதை தொடர்ந்து தணிகாச்சலம் என்பவரும் பொதுக்குழுவுக்கு தடைக்கோரி மனு அளித்துள்ளார். இந்த வழக்குகளை பட்டியலிடப்பட்ட வழக்குகளாக சேர்த்து இன்று பிற்பகல் 3 மணிக்கு மொத்த வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு சரிவு! ஆனால் பெட்ரோல் விலை?

தமிழக மீனவர்கள் படகின் மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல்.. 4 பேர் படுகாயம்..!

தங்கை திருமணத்தை நடத்த கஞ்சா விற்ற இளைஞர்.. போலீசில் சிக்கியதால் குடும்பத்தினர் அதிர்ச்சி..!

சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம்! தேதி அறிவிப்பு..!

சென்னை அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்: சட்டக்கல்லூரி மாணவி உள்பட 4 பேர் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments