Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Siva
வியாழன், 9 மே 2024 (09:18 IST)
தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது என்பதும் நேற்று கூட சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது என்பதையும் பார்க்கவும்.

ஒரு பக்கம் 100° பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கோடை மழை பெய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்றும் தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments