Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல் சென்னையில் சிற்றுந்துகள்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

mini
, செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:44 IST)
நாளை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் சிற்றுந்துகள் இயக்கப்பட இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
மெட்ரோ நிர்வாகம் ரயில் நிலையங்களுக்கு இடையே முக்கிய பகுதிகளுக்கு சிற்றுந்துகளை இயக்கி வருகிறது என்பதும் இதை மெட்ரோ பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் நாளை முதல் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை இரண்டு இணைப்பு சிற்றுந்துகள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ இணைப்பு சிற்றுந்துகளை இயக்கி வரும் நிலையில் நாளை முதல் புதிய சிற்றுந்துகளை இயக்க இருப்பதை அடுத்து குருநானக் கல்லூரி செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து மினி லாரியில் தூக்கி சென்ற கொள்ளையர்கள்: அதிர்ச்சி சம்பவம்