Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மேம்பாலத்தில் அடுத்தடுத்து வழிப்பறி! – காவல்துறை தீவிர விசாரணை!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (12:30 IST)
சென்னை பாடி மேம்பாலத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து வழிப்பறி கொள்ளை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாடி மேம்பாலம் பகுதியில் நேற்று கேட்டரிங் ஊழியரான ருத்ரா என்பவர் பெட்ரோல் இல்லாததால் தனது இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ருத்ராவை நிர்வாணப்படுத்தி கொள்ளையடித்துள்ளனர்.

அதேபோல பாடி மேம்பாலம் அருகே 100 அடி சாலையில் லிப்ட் கேட்பது போல பரத் என்பவரின் வாகனத்தை நிறுத்தியும் பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திடீர் கொள்ளை கும்பலை தேடி பிடிக்க சென்னை போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments