Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடனைப் பிடிக்க சென்ற போலிஸ் – திருடனானக் கதை !

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (11:45 IST)
சென்னயில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நகை திருட்டுகளைப் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட போலிஸ் குழு திருடர்களிடம் நகையைப் பறிமுதல் செய்து பங்கிட்டுக்கொண்டுள்ள தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகமாக நகை திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இந்த திருட்டு சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவும் திருடர்களைப் பிடிக்கவும் 3 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையை சேர்ந்த 2 அதிகாரிகளும் விடுப்பு எடுத்துக்கொண்டு திருடர்களை தேடி சென்று பிடித்துள்ளனர்.

ஆனால் பிடித்த திருடர்களைக் கைது செய்யாமல் அவர்களிடமே பேரம் பேசி 20 சவரன் நகைகளையும் 10 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியானதை அடுத்து மாவட்ட காவல் இணை ஆணையர் 3 போலிஸார் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் மூவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டிஸும் அனுப்பப்பட்டுள்ளது.

போலிஸ்காரர்களே திருடர்களோடு சேர்ந்துகொண்டு திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments