Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இருந்து திருப்பதிக்கு குடை ஊர்வலம்.. பக்தர்கள் பரவசம்..!

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (13:38 IST)
புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருப்பதிக்கு குடை ஊர்வலம் கிளம்பியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
 
சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி குடை ஊர்வலம் இன்று காலை புறப்பட்டது. பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை, மின்னும் பொருட்களால் தயாரிக்கப்பட்ட 11 குடைகள் திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடமும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் நிர்வாகத்திடமும் ஒப்படைக்கப்பட உள்ளன
 
மேலும் இந்த 11 குடைகளில் 9 குடைகள் திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், 2 குடைகள் கீழ் திருப்பதியில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஒப்படைக்கப்பட உள்ளது என்றும் குடை ஊர்வலத்தை நடத்தும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments