Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சலுக்கு இப்டினா.. பராசக்தி படம் இப்போ வந்தா? - ப. சிதம்பரம் கேள்வி

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (09:31 IST)
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சினிமா துறையினருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு அறிவித்தது. மேலும், தணிக்கை குழுவினரை தாக்கி எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் “திரைத்துறையினருக்கு ஒரு செய்தி; சட்டம் வந்துகொண்டிருக்கிறது.  இனிமேல் நீங்கள் அரசின் திட்டங்களை பாராட்டி டாக்குமெண்டரி படங்கள் மட்டுமே எடுக்க முடியும்” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும், மெர்சலில் சில வசனங்களை நீக்க சொல்லி பாஜக கேட்கிறது. வசனங்களில் புரட்சி படைத்த பராசக்தி படம் தற்போது வெளியானால் என்னவாகும் என யோசித்து பாருங்கள் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments