Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொத்தேரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி

பொத்தேரியில்  ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும்  நிதியுதவி
, வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:14 IST)
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில்  ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும்  நிதியுதவி அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையைக் கடக்க  முயன்றவர்கள் மீது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி ஒன்று மோதி  விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி  6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில், படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

அதில்,'' செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ரயில்வே சாலை சந்திப்பு எதிரில் இன்று (11-8-2023) காலை சென்னை நோக்கி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மூன்று இருசக்கர வாகனங்களின் மீது எதிர்பாராதவிதமாக மோதியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு
மிகுந்த வேதனையடைந்தேன்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை விபத்து நடந்த இடத்திற்குச் சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன்''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளத்தில் விழுந்து இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம்: டிடிவி தினகரன் கண்டனம்..!