Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முப்படை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் திடீர் ஆலோசனை

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (10:46 IST)
தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முப்படை அதிகாரிகளுடன் இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
 
சமீபத்தில் ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்ட நிலையில் இந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயினர். இவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்டாலும் இன்னும் ஒருசிலரின் நிலை என்னவென்று தெரியவில்லை
 
இந்த நிலையில்  சென்னை தலைமைச் செயலகத்தில் முப்படை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். 
 
கடலில் சிக்கிய மீனவர்கள் மீட்பு மற்றும் கடல் எல்லைகளை விரிவுபடுத்துவது குறித்து அவர் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும் வட தமிழகத்தை நெருங்கும் புது புயலை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அவர் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments