Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ வாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் பலி

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (17:04 IST)
கடலூர் மாவட்டத்தில் பாதாளச் சாக்கடை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி மூன்று துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.


 

 
கடலூர் மாவட்டத்தில் பாதாளச் சாக்கடை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி மூன்று துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தற்போது அவர்களது உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
 
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யக்கூடாது என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். பாதளச் சாக்கடை துப்புரவு தொழிலாளர்கள் இறங்கி சுத்தம் செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. 
 
இருந்தும் இந்த உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சம்பவம் எப்படி நடைப்பெற்றது என விசாரணை நடந்து வருகிறது  
 
துப்புரவு தொழிலாளர்கள் தொடர்ந்து மரணமடைந்து வரும் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லாமல் சுத்தம் செய்யும் போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்கிறது. அரசு சார்பில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறதா என்பதில் சந்தேகம் நீடித்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments