Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கெட்டுப்போன உணவால் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு உதவி: முதல்வர் அறிவிப்பு

Stalin
, வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:52 IST)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு உண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனை அடுத்து அந்த காப்பகத்தில் செய்யப்பட்ட உணவை பரிசோதனை செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிறுவர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு கொண்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் செய்துள்ளார்.
 
மேலும் இந்த உணவைச் சாப்பிட்டு உடல் நலக்குறைவால் சிகிச்சையில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் அறிவுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரிப்பு!