Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (10:24 IST)
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும்,  ஆளுநர் மாளிகைக்கு வெளியே தெருவில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது  என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
மதுரையில் இன்று தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் மரியாதை செலுத்தி விட்டு பேசிய போது  முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறுகையில், ‘ஆளுநர் மாளிகையில் இருந்து பொய் தகவல் பரப்பப்படுகிறது என்றும், ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறி வருகிறது எனவும் குற்றஞ்சாட்டினார்.
 
முன்னதாக பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்திற்கு முதல்வர் வருகை தந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதையை முதல்வர் ஸ்டாலின் செலுத்தினார்.
 
மேலும் தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியது திமுக அரசு என முதல்வர்  ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments