Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா களமாகும் கோவை..! ஒரே வாரத்தில் 3 பேர் பலி!

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (12:57 IST)
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கோவையில் ஒரு வாரத்தில் மூன்று பேர் கொரோனாவால் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரத்தில் 100 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்புகள் தற்போது 300ஐ நெருங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வடவள்ளியை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதுபோல திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது பெண் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் 3 பேர் கொரோனாவால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments