Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ். அனுப்பிய கல்லூரி முதல்வர்!

மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ். அனுப்பிய கல்லூரி முதல்வர்!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (11:22 IST)
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரி முதல்வர் ஒருவர் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆபாசமாக மெஸ்ஸேஜ் அனுப்பியது அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கல்லூரி முதல்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 
 
நாமக்கல் மாவட்டம் வளையக்காரனுரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்தவர் குமார் சார்லிபால் என்பவர். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவிகளுக்கு ஆபாசமாக மெஸ்ஸேஜ் அனுப்பியுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் முதல்வர் குமார் சார்லிபாலின் கார் கண்ணாடியை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கல்லூரியின் முன்பு உள்ள சாலையில் 300 பேர் திரண்டு சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனையறிந்த போலீசார் அங்கு உடனடியாக விரைந்து வந்து அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் முதல்வர் குறித்து புகார் அளித்ததையடுத்து முதல்வர் குமார் சார்லிபால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மு.க,ஸ்டாலின், விஜய்!

இன்று மாலை பவள விழா.. முப்பெரும் விழாவில் உங்களை காணக் காத்திருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments