Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் விவசாய மாநாடு.. ராகுல்காந்தி வருவாரா? – காங்கிரஸ் அறிவிப்பு!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (14:10 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கோவையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு நடத்துவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ள நிலையில் அதில் ராகுல் காந்தி கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஏர்கலப்பை பேரணி நடைபெறும் என்றும், அதில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் முன்னதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நவம்பர் 22ம் தேதி கோவையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு நடைபெறும் என்றும்,அதை தொடர்ந்து அன்று மாலையே ஏர்கலப்பை பேரணி நடைபெறும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் ராகுல் காந்தி கலந்து கொள்வது பற்றி எந்த தகவலும் இல்லை என்றாலும், பாஜக வேல் யாத்திரைக்கு அமித்ஷா போன்ற மத்தியில் பிரபலமான தலைவர்கள் வருவதால், காங்கிரஸின் பேரணிக்கும் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments