Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரிசோதனைகளை குறைக்க அறிவுறுத்தல்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (10:46 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பரிசோதனைகளையும் குறைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக ஒமிக்ரான் பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கின. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதுடன், அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் அதிகரிப்பட்டன. மேலும் கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்புகள் குறைந்து வருவதால் கொரோனா பரிசோதனையையும் குறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அறிகுறிகள் தென்பட்டால் மட்டும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments