Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்காக சசிகலா படுகொலை - கணவர், மனைவி கைது

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (16:42 IST)
சசிகலா என்ற குடும்ப பெண் நகைக்காக கொலை செய்யப்பட்ட விவகாரம் கன்னியாகுமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா(36) என்ற பெண், கடந்த 25ம் தேதி தோழியை சந்திக்க செல்வதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. எனவே அவரது கணவர் போலீசாரிடம் புகார் அளித்தார். 
 
போலீசாரின் விசாரணையில், கலா என்பவரின் வீட்டிற்கு அவர் சென்றது தெரிய வர, கலா மற்றும் அவரது கணவர் முருகேசன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது. 
 
கலாவும், முருகேசனும் அந்த பகுதியில் வசிக்கும் சில குடும்ப பெண்களிடம் பணத்தாசை காட்டி மயக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். அதன் படி கடந்த 25ம் தேதி ஒரு கஸ்டமருக்காக சசிகலாவை வரவழைத்துள்ளனர். 
 
அதன் பின், தங்களின் மருத்து செலவிற்காக சசிகலா அணிந்துள்ள நகைகளை கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு சசிகலா மறுப்பு தெரிவிக்கவே, கோபத்தில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து, நகைகளை பறித்துக் கொண்டு, அவரது உடலை வீட்டின் பின் புறம் குழி தோண்டி புதைத்து விட்டனர். 
 
அதன்பின் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்கிற பயத்தில், அவரது சடலத்தை அங்கிருந்து வெளியே எடுத்து சென்று, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் புதைத்தது தெரிய வந்தது. அவர்களின் வாக்குமூலத்தையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
 
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments