Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - எடப்பாடிக்கு செக் வைத்த நீதிமன்றம்

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (14:19 IST)
பள்ளிசாரா விழாக்களுக்கு பள்ளிக்குழந்தைகளை அழைத்து செல்லக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
சமீபகாலமாக, தமிழக அரசு விழாக்களில், குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கு பெறும் கூட்டங்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்க வைப்பது அதிகரித்து வருகிறது.
 
வருகிற செப்.30ம் தேதி நடைபெறும் எடப்பாடி தலைமையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும், பள்ளிக் குழந்தைகளை பங்கேற்க வைக்க அதிமுகவினர் திட்டமிட்டிருந்தனர்.
 
இந்நிலையில், இதற்கு தடை விதிக்குமாறு சமூக ஆர்வலரும், மாற்றம் இந்தியா என்ற அமைப்பை நடத்தி வருபவருமான நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளிசாரா விழாக்களுக்கு பள்ளிக்குழந்தைகளை அழைத்து செல்வதற்கு தடை விதித்தார். மேலும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விதிமுறைகளை வகுக்கும் வரை பள்ளிக் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்ல இடைக்கால தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.
 
அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments