Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு வழக்கு.. அமைச்சர் உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (14:05 IST)
கொடநாடு வழக்கில் ஈபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க தடை நீட்டிப்பு என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொடநாடு வழக்கில் ஈபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க அமைச்சர் உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடையை நவம்பர் 2 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பதில் மனு தாக்கல் செய்ய உதயநிதி தரப்பில் அவகாசம் கோரியதை ஏற்று விசாரணை இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 7ம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனத்திற்கு அர்த்தத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் இருக்கும் தேடிக் கொண்டிருப்பதாகவும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டு தாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிஞ்சிருக்க முடியாது என்றும், அந்த ஆடே காணாமல் போகும் போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பதிவு செய்திருந்தார்.

இந்த அறிக்கை எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவதூறு பரப்பும் வகையில் இருப்பதால் உதயநிதி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மான நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தான் இன்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments