Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 விபத்து; கிரேன் ஆப்ரேட்டர் கைது..

Arun Prasath
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (15:28 IST)
இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த நிலையில் கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள்.

மேலும் இதில் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் லைகா, நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பின் கிரேன் ஆப்ரேட்டர் ராஜனை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் லைகா நிறுவனம் மற்றும் கிரேன் ஆப்ரேட்டர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments