Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்: கலெக்டர் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (16:51 IST)
தாழ்வான பகுதிகள் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருவதாகவும் நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  
 
மேலும்  ஆற்றில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், இடி மின்னல் கனமழை ஏற்படும்போது திறந்தவெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ்நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் மழைநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம் என்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  
 
மேலும் ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பொதுமக்கள் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் பேரிடர் காலங்களில் டார்ச் லைட் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments