Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டெர்லைட்டுக்கு கரெண்ட் கனெக்‌ஷன குடுங்கப்பா!!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Advertiesment
ஸ்டெர்லைட்
, வியாழன், 24 ஜனவரி 2019 (13:27 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு உடனடியாக வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். 
ஸ்டெர்லைட்
இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 3 வார காலத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஸ்டெர்லைட்
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறந்துகொள்ளலாம் எனவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள முழு முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் ஸ்டெர்லட் ஆலை நிறைவேற்றி பின்னர் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பளித்தது.
 
இந்நிலையில் ஆலையை விரைவில் திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பை வழங்கக்கோரி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் தூத்துக்குடி ஆட்சியர் போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்!! வெளியான அதிர்ச்சி காரணம்