Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு

Webdunia
புதன், 31 மே 2023 (19:29 IST)
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு   தனியார் நிறுவனங்கள் மூலம்  குத்தகை முறையில்  ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவதைக் கண்டித்து மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள்  நேற்று முன்தினம்  திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்திடீர் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

போக்குவரத்துத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை தேர்வு செய்யும் முடிவுக்கு எதிரிப்பு வலுத்துள்ளதால், போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஜூன் 9 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளளது.

இதுகுறித்து சிஐடியு மாநில தலைவர் சவுந்திய ராஜன், ‘’போக்குவரத்துறையில் வெளி ஏஜென்சி ஊழியர்களை எடுக்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக உறுதியளித்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜூன் 9 ஆம் தேதி தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு.? பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு..!!

துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண் - கொலையில் திடுக்கிடும் தகவல்.! சடலத்தை 2 நாட்கள் வீட்டில் வைத்திருந்த கொலையாளி..!!

தெரியாத நபர்களிடம் இருந்து அனுப்பப்படும் பணம்.. உஷாராக இல்லையென்றால் மொத்த பணமும் காலி..!

தங்கம் கடத்துபவர்களின் புது டெக்னிக்.. விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை..!

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments