Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு..!

Advertiesment
ராணுவம்

Siva

, ஞாயிறு, 11 மே 2025 (09:52 IST)
ராணுவ வீரர்கள் எல்லையில் போய் சண்டை போட்டார்களா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, ‘பிரதமர் மோடிக்கு தான் திமுகவினர் நன்றி செலுத்த வேண்டும் என்றும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்றும் பேசிய அவர், ராணுவ வீரர்கள் என்ன எல்லையில் போய் சண்டையா போட்டார்கள்? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் மத்திய அரசுதான் வாங்கி கொடுத்தது, அதாவது மோடி தான் வாங்கி கொடுத்தார், எனவே திமுகவினர் பிரதமர் மோடியை தான் பாராட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
 
அவரது பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இது குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
இன்று நடந்த  செய்தியாளர்கள் சந்திப்பில்  இரவு பகல் பார்க்காமல்  நாட்டுக்காக பாடுபடும்  நம்ம இராணுவ வீரர்களை மதிக்காமல் பேசிய  தாக வந்துள்ள செய்திகள் தவறு , எங்க   பொதுச் செயலாளர்  அண்ணன் EPS  பாராட்டியுள்ளார் ,எங்க குடும்பமே முன்னால் இராணுவ வீரர்களை கொண்டது  இன்று நேற்று நாளை எப்பொழுதும் நான் ராணுவத்தை மதிக்கிறேன் !!! என செல்லூர் ராஜூ எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பகல்ஹாம் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது: ஒவைசி