Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா 8 அடி பாய்ஞ்சிருந்தா நான் 16 இல்ல 16 ஆயிரம் அடி பாய்வேன் - பஞ்ச் பேசும் தினகரன்

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (11:11 IST)
தமிழகத்தில் அராஜகமாக ஆட்சி நடத்தி வருகிறார் என எடப்பாடி பழனிசாமியை தினகரன் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான தினகரன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
ஏற்கனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தினகரனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை, அவர் ஒரு குட்டி எதிரி என பேசியிருந்தார்.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தினகரன், என்னை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என எடப்பாடி கூறியிருக்கிறார். அவ்வாறு இருக்கும் போது, ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் 2017 பிப்ரவரி மாதம் சசிகலாவால் முதலமைச்சர் ஆக முடியாதபோது, சசிகலா கூறியதால் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஒப்புக்கொண்டனர். அப்போது எடப்பாடியார் 2 வயது குழந்தை போல் என் பாதம் தொட்டு வணங்கினார்.  தற்பொழுது அவர் அதனையெல்லாம் மறந்துவிட்டார் போலும்.
என்னை குட்டி எதிரி என எடப்பாடி கூறியிருக்கிறார். ஆம் நான் குட்டி தான். அம்மாவின் குட்டி நான். அம்மா 8 அடி பாஞ்சிருந்தா நான் 16 இல்ல 16 ஆயிரம் அடி பாய்வேன் என்பதை பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும் என தினகரன் ஆவேசமாக பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments