Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குண்டுராவ் போட்ட குண்டு கூட்டணியில் வெடிப்பதற்குள் ஊதி அனைத்த காங். சீனியர்கள்!

Advertiesment
திமுக
, வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (12:45 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூட்டணி என ஆட்சி பேசிதை தற்போது பின்வாங்கியுள்ளார். 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி அதே கூட்டணியில் நீட்டிக்குமா? அல்லது போதுமான தொகுதி கிடைக்காமல் கூட்டணி மாறுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என சமீப காலமாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறிவருகின்றனர். இதையடுத்து தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்துள்ளார். 
திமுக
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த குண்டுராவ் தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி கூட்டணி ஆட்சிதான் என்றும் வரும் தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பெரிய பிரச்சணையாய் வெடிப்பதற்குள் இதை ஸ்ரீ செய்துள்ளனர் காங். சீனியர்கள்.
 
ஆம், தமிழக நிலைமையை எடுத்து சீனீயர்கள் எடுத்த கூற இதனை புரிந்துக்கொண்ட தினேஷ் குண்டுராவ், மு.க. ஸ்டாலினை முதல்வராக்குவோம். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய பாடுபடுவோம் என தனது கருத்தில் திருத்தத்தை கொண்டுவந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.பி.பி-க்கு என்ன ஆச்சு? மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தார்; போலீஸ் குவிப்பு!