Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.பி வீட்டில் தாக்குதல்! காரணம் திமுக அமைச்சரின் ஆட்களா? – திருச்சியில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (09:51 IST)
பிரபல திமுக எம்.பி திருச்சி சிவா வீட்டில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. அவரது திருச்சியில் உள்ள வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பைக்குகளும் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிலரை கைது செய்துள்ளனர். சமீபத்தில் திருச்சி சிவாவின் வீடு உள்ள பகுதியில் புதிய விளையாட்டு திடல் திறக்கப்பட்டது. அதன் திறப்பு விழா கல்வெட்டில் திருச்சி சிவா பெயர் இடம்பெறாதது குறித்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் திமுக அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கும், திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

அடுத்த கட்டுரையில்
Show comments