Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம் : சென்னையில் பல இடங்களில் போராட்டம்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (10:22 IST)
காவிரி மேலாண்மை அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் திமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் திமுக உட்பட பல எதிர்கட்சிகளும் போராட்டங்களை துவக்கியுள்ளன.
 
இந்நிலையில், சென்னையில் பல இடங்களிலும் இன்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மேயர் சுப்பிரமணியன் தலைமையில் சைதாப்பேட்டையில் சாலை மாறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
 
வஞ்சிக்காதே தமிழகத்தை வஞ்சிக்காதே.. அடிக்காதே தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே.. வாரியம் அமைக்கப்படும் வரை திமுக போராட்டம் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் “காவிரி விவகாரத்தில் மோடியும், எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டு சேர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றனர். எனவே அதை கண்டித்து தொகுதிக்கு 2 இடங்கள் என திமுக போராட்டம் நடத்தி வருகிறது. சென்னையில் மட்டும் 10 இடங்களில் திமுக போரட்டத்தை முன்னெடுத்துள்ளது.  வருகிற 5ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அன்று தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments