Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோச்சா புயல் : தெற்கு அந்தமான் பகுதிக்கு செல்ல வேண்டாம் - அமைச்சர் ராமச்சந்திரன்

Webdunia
வியாழன், 11 மே 2023 (21:41 IST)
மோச்சா புயல் காரணமாக தெற்கு அந்தமான்பகுதிக்கு மே 14 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

வங்க கடலின் தென்கிழக்கு மற்றும் தெற்கு அந்தமான் பகுதியை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தற்போது ‘மோக்கா’ புயலாக வலுவடைந்துள்ளது.

இந்த மோக்கா (Mocha) புயல் வடக்கு – வடகிழக்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வரும் நிலையில் வரும் 14ம் தேதி வங்கதேசம் – மியான்மர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை அமைச்சர் கூறியுள்ளதாவது: மோச்சா புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு வரும் மே 14 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம்; வங்காள விரிகுடா கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம்; ஏற்கனவே கடலுக்குச் சென்றவர்கள் விரைவாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.                                                        

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments