Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

Mahendran

, வெள்ளி, 17 மே 2024 (16:00 IST)
சென்னையில் செல்போன் ஆப் மூலமாக போதை மருந்து விற்பனை செய்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் என்பதும் அவ்வப்போது போதை பொருள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிக்கை விட்டிருந்த நிலையில் தற்போது சென்னையில் மாத்திரை வடிவில் போதை பொருள் விற்பனை செய்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். 
 
சென்னை கொருக்குப்பேட்டையில் செல்போன் ஆப் மூலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கணேஷ், ராஜேஷ், ரஞ்சித் மற்றும் உதயகுமார் ஆகிய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
மேலும் பத்து அட்டை 4500 ரூபாய்க்கு வாங்கி ஒரு அட்டை 2000 ரூபாய்க்கு அவர்கள் விற்பனை செய்ததாகவும் இதன் மூலம் அதிக பணம் லாபம் அடைந்திருப்பதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
இந்த போதை பொருள் அட்டைகளை எங்கிருந்து அவர்கள் வாங்கினார்கள்? யாருக்கு விற்பனை செய்கிறார்கள்? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!