Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (22:00 IST)
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் திடீரென லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில மாதங்களாகவே லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் முன்னாள் அமைச்சர்கள் அரசியல்வாதிகளின் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்புத் துறையால் அரசு அலுவலங்களில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு அலுவலகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் 26.99 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது மட்டுமின்றி பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாகவும் பல அரசு உயர் அதிகாரிகள் இதில் சிக்குவார்கள் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments