Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறை குறி வைக்கும் அடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனா? புதிய மனு தாக்கல்..!

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (10:31 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் பொன்முடியை அடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமலாக்கத்துறை குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்து உள்ளது. இந்த மனு இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த வழக்கில் அமலாக்கத்துறை இணைய நீதிமன்றம் அனுமதி அளித்தால்  அமலாக்கத்துறை சில அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குறி வைத்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments