Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு காவல் நீட்டிப்பு.. நீதிபதி உத்தரவு..!

Ankit Tiwari
, வெள்ளி, 29 டிசம்பர் 2023 (12:42 IST)
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜனவரி 11ஆம் தேதி வரை காவல் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அரசு டாக்டர் இடம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை மூன்று நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இதனை அடுத்து அவருடைய ஜாமின் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்த நிலையில் அடுத்த கட்டமாக மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் இன்றுடன் அவருடைய காவல் நீடிப்பு முடிவடைவதை அடுத்து காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து அவரை ஜனவரி 11-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் வரைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். 
 
இதனை அடுத்து அவர் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அள்ளித் தந்த வள்ளல்; நரிக்குறவ மக்கள் வீடு கட்ட 7 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த விஜயகாந்த்!