Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை வந்தா வெள்ளம் வரத்தான் செய்யும்: அசால்ட் முதல்வர்

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (16:12 IST)
இன்று முதலே மழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி மிக கன மழைப் பெய்யும் வாய்ப்பிருப்பதாக ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 
 
ரெட் அலர்ட் என்பது மிகக் குறுகிய காலத்தில் அதீதமான கனமழைப் பெய்து அதனால் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகுவதாகும். தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 
 
இன்ற் இரவில் இருந்தே மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ரெட் ஆலர்ட்டும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மழை குறித்த முன் எச்சரிக்கை நடவடிக்கை என்னவென கேட்கப்பட்டது. 
 
இதற்கு அவர் பதில் அளித்தது பின்வருமாறு, பருவமழை முன்னெச்சரிக்கையை பொறுத்த அளவில், நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க தக்க ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. வெள்ளம் வருவது என்பது இயற்கை.

மழை அதிகமாக பெய்தால் வெள்ளம் வரும். இப்போது கூட இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியது. இயற்கை யாரிடமும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. ஆனால் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையை அரசு எதிர்கொள்ள திட்டமிட்டு செயல்படுத்தி கொண்டுள்ளது என பதில் அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments