Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்காக அல்ல தேவைகளுக்காக... எடப்பாடியார் நச் பஞ்ச்

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (13:37 IST)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினை விமர்சிக்கும் பொருட்டு பேச துவங்கி கடைசியில் மக்களுக்காகதான் அனைத்தும் என பயங்கர டச்சிங்காக பேசியுள்ளார். 
 
சேலம் கந்தம்பட்டியில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அவர் பேசியது பின்வருமாறு, 
 
மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதை வழக்குபோட்டு தடுக்க திமுக முயன்றது. அரசின் நலத்திட்ட சாதனைகள் குறித்த புள்ளி விவரங்கள் தெரியாமல் பேசி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
கிராம சபை கூட்டத்தில் அரசை பற்றி ஸ்டாலின் தவறான தகவல்களை பேசி வருகிறார். ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களிடம் அதிமுக அரசு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
அதிமுக அரசு திட்டங்கள் எதையும் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கிறது என பேசினார். அதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட கூடாது என்பதற்காக உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. இன்னும் 5 மாதங்களில் புதிய பாலங்கள் திறக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments