Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போடாமலே பிரபல நடிகர் விரலில் மை வைக்கப்பட்டதா? பெரும் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (13:54 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றபோது பிரபல தமிழ் நடிகர் ஒருவருக்கு ஓட்டு போடாமலேயே அவரது விரலில் மை வைக்கப்பட்ட விவகாரம் தற்போது தெரிய வந்துள்ளது
 
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் தேர்தல் அதிகாரிகள் ஓட்டு போட அனுமதிக்கவில்லை. ஆனால் இதே நிலைமை சிவகார்த்திகேயனுக்கும் இருந்த நிலையில் அவரை மட்டும் ஓட்டு போட அனுமதித்தது ஏன்? என்று ஸ்ரீகாந்த் வாக்குவாதம் செய்ய வேறு வழியின்றி தேர்தல் அதிகாரிகள் ஸ்ரீகாந்தையும் அவரது மனைவியையும் ஓட்டு போட அனுமதித்ததாக கூறப்படுகிறது
 
ஆனால் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, நடிகர் ஸ்ரீகாந்தை ஓட்டு போட தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும், அவரது விரலில் மை மட்டுமே வைக்கப்பட்டது என்றும் கூறினார். 
 
ஓட்டே போடாமல் விரலில் மை மட்டும் வைத்தது ஏன்? என்ற கேள்வி எழுவதோடு, ஓட்டளித்த பின்னர் ஸ்ரீகாந்த் தான் வாக்களித்ததாக கொடுத்த பேட்டியும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் இதுகுறித்து விளக்கமளித்தால் மட்டுமே இந்த குழப்பம் தீரும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments