Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்களிடையே பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (17:06 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவ மாணவிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடக்க வேண்டிய பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்படவில்லை
 
இந்த நிலையில் இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளுக்கான நெறிமுறைகளின்படி செமஸ்டர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. முந்தைய செமஸ்டர் தேர்வு மற்றும் உள் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கு அடுத்த செமஸ்டர் உடன் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மாணவர்கள் இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளை அறிய www.annauniv.edu, மற்றும் www.aucoe.annauniv.edu ஆகிய இணைய தளங்களில் சென்று பார்க்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments