Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. படத்தை வைத்தால் வீரப்பன், ஆட்டோ சங்கர் படத்தை வைப்பேன். இளங்கோவன்

Webdunia
சனி, 27 மே 2017 (06:15 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க கூடாது என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போர்க்கொடு தூக்கி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட ஒருவரது புகைப்படத்தை எப்படி சட்டமன்றத்தில் வைக்கலாம் என்பது தான் அவர்களுடைய கேள்வி



 


இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியபோது, 'சட்டசபையில், ஜெ., படம் வைக்கப்பட உள்ளதாகவும், அதை திறக்க பிரதமரை அழைத்ததாகவும், முதல்வர் பழனிசாமி கூறுகிறார். நீதிமன்றத்தால் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டவரின் படத்தை, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்றோர் படங்களுடன் வைப்பது, அவர்களை அவமானப்படுத்துவதாகும்.

அவ்வாறு, ஜெ., படம் வைத்தால், ஐ.ஜி., அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோ சங்கரின் படங்களை வைப்போம். எம்.ஜி.ஆர்., சமாதி அருகே, ஜெ., உடல் புதைக்கப்பட்டது. அவ்விடத்தில் மணி மண்டபம் கட்ட உள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறுகின்றனர். இது, மிகப்பெரிய தவறு. கடற்கரை, அரசு இடம். அங்கு அரசு நிதி ஒதுக்கி, மணி மண்டபம் கட்டுவது ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருந்தாலும் தமிழக மக்களுக்கு காவிரி பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளை தீர்த்தவர் ஜெயலலிதாதான். அவர் ஆரம்பித்த வைத்த பல திட்டங்கள் மூலம் இன்று கோடானுகோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். எனவே அவரை வீரப்பனோடும், ஆட்டோ சங்கரோடும் ஒப்பிடக்கூடாது என்று ஆளுங்கட்சி பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments