Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பத்தாவது மட்டுமே முடித்துவிட்டு பல ஆண்டுகள் மருத்துவம்! – போலி மருத்துவர் கைது!

பத்தாவது மட்டுமே முடித்துவிட்டு பல ஆண்டுகள் மருத்துவம்! – போலி மருத்துவர் கைது!
, புதன், 24 ஜூன் 2020 (12:43 IST)
சிவகங்கையில் உரிய மருத்துவத்தகுதிகள் இல்லாமலே பல ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள தேவக்கோட்டை பகுதியில் பல ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருபவர் ராமசாமி. 56 வயதான இவர் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் மருத்துவம் பார்த்து வருகிறார், ஆனால் அவரது மருத்துவத்தில் குறைபாடுகள் உள்ளதாக பலர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

புகாரையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் போலீஸார் ராமசாமி வீட்டில் சோதனை நடத்தியதில் அவர் மருத்துவம் படிக்கவில்லை என்றும், பத்தாம் வகுப்பே படித்துவிட்டு பல ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அங்கிருந்த மருந்து பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை: ஜூன் 30க்கும் பிறகும் ஊரடங்கு நீட்டிப்பா?