Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல சினிமா 'ஸ்டண்ட் மாஸ்டர்' கனல் கண்ணன் கைது

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (19:50 IST)
தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை  நாகர்கோலியில் சைபர் கிரைம் போலீஸர் இன்று கைது செய்துள்ளனர்.

சினிமா முன்னணி  நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்தவர்  கனல் கண்ணன். இவர்,  சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக கனல் கண்ணன் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ’’இதுபோன்று பேச மாட்டேன்’’ என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென நிபந்தனையுடன் அவருக்கு  ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய  வீடியோவை வெளியிட்டதாக புகார் அளிப்பட்டதன் பேரில், சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை  நாகர்கோவில் சைபர் கிரைம் போலீஸார் இன்று கைது செய்தனர்.

மேலும், சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவதும், மத பிரிவினையை உண்டாக்குவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments