Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்ற குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த தந்தை – போக்ஸோ சட்டத்தில் கைது !

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (11:04 IST)
ராம்நாதபுரம் மாவட்டத்தில் தனது இரு மகள்களுக்கும் பாலியல் தொல்லைக் கொடுத்த மாரிமுத்து என்ற தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு 7 மற்றும் 5 வயதில் இரு மகள்கள் உள்ளனர். மாரிமுத்துவின் மனைவி தினமும் கூலி வேலைகளுக்கு சென்றுவிடுவதால் குழந்தைகள் அதிகநேரம் தனிமையில் இருக்கவேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் வழக்கம்போல வேலைக்கு சென்ற அவர், வீட்டுக்குத் திரும்பியபோது குழந்தைகள் அழுதுள்ளனர். அவர்களிடம் கேட்டபோது தந்தை மாரிமுத்து தங்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததை சொல்லியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்த தாய், காவல் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட போலிஸார் மாரிமுத்துவை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்