Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெடித்த மோதல்: கம்பி எண்ணும் பர்த்டே பாய்!

Webdunia
புதன், 27 மே 2020 (09:04 IST)
சீர்காழியில் பிறந்தநாள் விழா கொண்டாடிய கூட்டத்தினரிடையே எழுந்த மோதலில் அடிதடி சம்பவங்கள் நடந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நள்ளிரவில் கேக் வெட்ட அவரது நண்பர்கள் முடிவு செய்துள்ளனர். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து சாலையில் கேக் வெட்டி கொண்டாடியபோது கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் கடுப்பான அதே தெருவை சேர்ந்த சிவராஜ் என்பவர் நள்ளிரவில் கூச்சலிட்டது குறித்து தட்டி கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் பெண்கள் உட்பட 10 பேர் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார் பிறந்த நாள் கொண்டாடிய விஜய் உள்ளிட்ட 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எதிர்பாராமல் நடந்த இந்த கைகலப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments