Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சில்க்ஸ் பக்கத்து கடையில் திடீர் தீ விபத்து: பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2017 (23:59 IST)
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையின் 7 மாடி கட்டிடத்தில் கடந்த 31ஆம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டு கட்டிடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.





இந்த நிலையில் இன்று மாலை சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு அருகில் அமைந்துள்ள பி.கே.ஆர் என்ற ஓட்டலில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடந்த மூன்று நாட்களாக மூடியிருந்த இந்த ஓட்டலின் சமையலறையில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்ததும் சென்னை சில்க்ஸ் பகுதியில் பணியாற்றி வந்த தீயணைப்புத் துறையினர் , உடனடியாக ஓட்டலில் பற்றிய தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தினால் யாருக்கும் காயம் இல்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் சென்னையில் நடைபெற்ற மூன்றாவது தீ விபத்து இதுவாகும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments