Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு ஆலையில் வெடி விபத்து – இதுவரை 7 பேர் பலி !

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (15:32 IST)
சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகாசி அருகேயுள்ள சாத்தூர் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்னர் பயங்கரத் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. வேகமாகப் பரவிய இந்த தீயால் ஆலையின் மொத்த தரைத்தளமும் இடிந்து விழுந்தது.

இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 7 பேர் வரை உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் பற்றிய முழுமையான விவரம் இன்னும் தெரியவில்லை என்றும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் உயிரிழப்பு இன்னும் அதிகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைந்து வந்த தீயணைப்புப் படை தீயை அணைக்கக் கடுமையாகப் போராடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments