Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பு பணிக்கு அமைச்சர்கள் குழு அமைப்பு!

Webdunia
ஞாயிறு, 9 மே 2021 (20:54 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக வருவதை அடுத்து தமிழக அரசு கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி கொரோனா தடுப்பு பணிக்கு அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இந்த அமைச்சர்கள் குழு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணியை கண்காணிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மா சுப்பிரமணியம் மற்றும் சேகர் பாபு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை தவிர செங்கல்பட்டு, கோவை, சேலம், திருவள்ளூர், மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
சென்னை -  மா.சுப்பிரமணியன், சேகர்பாபு
 
செங்கல்பட்டு -  தா.மோ.அன்பரசன்
 
கோவை -  அர.சக்கரபாணி,  கா.ராமச்சந்திரன்
 
சேலம் -  செந்தில் பாலாஜி
 
திருவள்ளூர் -  சா.மு.நாசர்
 
மதுரை -  பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன்
 
ஈரோடு -  முத்துசாமி
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments