Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடை வெயிலுக்கு இலவசமாக குளுகுளு ஏசியா? யார் கிளப்பி விட்டது? - தமிழக அரசு விளக்கம்!

Advertiesment
Air Conditioner

Prasanth Karthick

, புதன், 14 மே 2025 (08:55 IST)

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க மத்திய, மாநில அரசுகள் ஏசி இலவசமாக தருவதாக பரவி வரும் தகவல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதிய வேளைகளில் பல வீடுகளில் மக்கள் உள்ளே இருந்தாலுமே புழுக்கத்தில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.

 

இந்நிலையில் கோடை வெப்பத்தை தணிக்க மத்திய அரசு இலவசமாக ஏசி வழங்குவதாகவௌம், அதனை மாநில அரசின் இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒரு தகவல் குறுஞ்செய்தியாக ஆங்காங்கே பரவி வருகிறது.

 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு, இதுபோன்ற எந்த திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. போலி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருக்கியில் இருந்து இனி மார்பிள்ஸ் வாங்க மாட்டோம்: ராஜஸ்தான் வியாபாரிகள் உறுதி..!