Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைவாணர் அரங்கில் கூடும் தமிழக சட்டசபை கூட்டம்: நீட் பிரச்சனையை திமுக எழுப்புமா?

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (07:57 IST)
கலைவாணர் அரங்கில் கூடும் தமிழக சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கொரோனா பாதுகாப்பு காரணமாக முதல் முறையாக சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் அனைத்து கட்சி எம்எல்ஏ களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு விட்டது என்பதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்பதும் தெரிந்ததே. 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதால் அவர்கள் இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள்
 
இந்த நிலையில் இன்று முதல் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் நீட்தேர்வு மரணம் குறித்த விஷயங்களை எழுப்ப திமுக தயாராகி வருகிறது என்பதும் அதற்கு பதிலடி கொடுத்த அதிமுகவும் தயாராகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments