Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று முழு ஊரடங்கு முடிந்த மதுரையில் இன்று மேலும் 295 பேர்களுக்கு கொரோனா

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (08:52 IST)
மதுரையில் இன்று மேலும் 295 பேர்களுக்கு கொரோனா
மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்ததால் மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 14 வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்திருந்தது
 
இந்த நிலையில் நேற்றுடன் முழு ஊரடங்கு நிறைவடைந்து இன்று முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அமலுக்கு வந்துள்ளது. எனவே இன்று முதல் மதுரை மற்றும் ஊரகப்பகுதிகளில், சிறிய கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களை, பொது மக்கள் வழிபாட்டுக்கு திறந்திருக்கும் என்பதும், அனைத்து தொழிற்சாலைகளும், நுாறு சதவீத பணியாளர்களுடன் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நேற்றுடன் முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று மதுரையில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,285 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் இதுவரை 2,667 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி  வீடு திரும்பி  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது மதுரையில் 3,199 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும், மதுரையில் இதுவரை 124 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments