Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் ஏமாற்றிவிட்டார் - பிக்பாஸ் காயத்ரி ரகுராம் பேட்டி

Webdunia
வியாழன், 14 ஜூன் 2018 (11:58 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போது எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை கமல்ஹாசன் நிறைவேற்றவில்லை என காயத்ரி ரகுமார் பேட்டியளித்துள்ளார்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடவடிக்கையின் மூலம் பெயரைக் கெடுத்துக்கொண்டவர் காயத்ரி ரகுராம். சமூக வலைத்தளங்களில் இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இப்போது கூட இவரின் டிவிட்டர் பக்கத்தில் பலரும் இவருக்கு எதிராக கிண்டலான கருத்துகளையே தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பிரபல வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் “பிக்பாஸ் 2 நிகழ்சிக்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அப்படி அழைத்தாலும் செல்ல மாட்டேன். அங்கு நான் நானாக இருக்க முடியாது. ஒருமுறை சென்று பெயரை கெடுத்துக்கொண்டதே போதும். எனவே எனக்கு அதில் விருப்பமில்லை.

 
அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வரும் போது எனக்கு பக்க பலமாக இருப்பேன் என கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்தார். எனக்கு மட்டுமல்ல. பல போட்டியாளர்களுக்கும் அவர் அன்பான வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால் எதையுமே அவர் செய்யவில்லை. அந்த நிகழ்சிக்கு பின் எங்களை அழைத்தும் அவர் பேசவில்லை. பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கூட கமல்ஹாசன் எதுவும் செய்யவில்லை” என அவர் பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments